கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள குவியும் விண்ணப்பங்கள்
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆயிரக்கணக்கில் விண்ணப்பங்கள் குவிந்து வருவதாக அம்மாகாணத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் அதிகமுள்ள இடங்களில் பெரியவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து சுமார் 2 மணிநேரத்தில் மட்டும் 73,000 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக அம்மாகாணத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் Christine Elliott தெரிவித்துள்ளார்.
எனினும் பலருக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதில் குழப்பம் நிகழ்வதாகவும், விண்ணப்பிக்கும் போது தொழில்நுட்ப கோளாறுகளை சந்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே அறிவியலாளர்களின் ஆலோசனையின்படி, அடுத்த வாரத்திற்குள் கொரோனா பரவல் அதிகமுள்ள இடங்களுக்கு தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுவிடும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் மே மாத இறுதிக்குள் 18வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த ஒன்ராறியோ மாகாணம் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.