ஆபிரிக்காவுக்குச் சென்று விடு... கனேடிய இளம் தாயாரை மிரட்டிய இருவர்
ஒன்ராறியோவில் கருப்பின இளம் தாயார் மீது இனவாத தாக்குதலை முன்னெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்ராறியோவின் லண்டனில் கடந்த ஞாயிறன்று பகல் இச்சம்பவம் நடந்துள்ளது. 26 வயதான Stella Oreym தமது பிஞ்சு குழந்தைகள் இருவருடன் தாயாரின் குடியிருப்பின் முன்பு நின்றுகொண்டு இருந்துள்ளார்.
அப்போது ஒரு வாகனத்தில் வந்த இருவர் இவர்களை எள்ளி நகையாடியுள்ளனர். மேலும், உங்கள் நாட்டுகே திரும்பி விடுங்கள், ஆபிரிக்காவுக்கே சென்று விடு என கையில் கத்தியுடன் மிரட்டியுள்ளனர்.
இந்த களேபரத்தின் இடையே, வழி போக்கர்கள் சிலரும் Oreym-ன் தாயாரும் உதவிக்கு விரைந்துள்ளனர். தொடர்ந்து அந்த இருவரும் தங்கள் வாகனத்தில் அங்கிருந்து சென்றுள்ளனர்.
இந்த நிலையில், 911 இலக்கத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் சுமார் 3 மணி நேரத்திற்கு பின்னரே சம்பவப்பகுதிக்கு பொலிசார் வந்து சேர்ந்ததாக Oreym மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பில் லண்டன் பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், குற்றச்சாட்டு அல்லது கைது நடவடிக்கை ஏதும் இதுவரை பதிவாகவில்லை எனவும், தேவை ஏற்படும் எனில் மேலதிக தகவல் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர்.
வாகனத்தின் புகைப்படத்துடன், அதில் அந்த இருவர் முகம் காட்ட பொலிசாருக்கு கையளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என Oreym கவலை தெரிவித்துள்ளார்.