ஒரே வாரத்தில் 3 பெண்கள் அளித்த புகார்: சிக்கிய ரொறன்ரோ இளைஞர்
ரொறன்ரோவின் ஜேன் மற்றும் ஷெப்பர்ட் பகுதியில் கடந்த வாரம் 3 பெண்களைத் தாக்கி துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை மாலை ஷெப்பர்ட் அவென்யூ வெஸ்ட் மற்றும் பக்லேண்ட் சாலை அருகே 55 வயது பெண்மணியை தாக்கி நபர் ஒருவர் வன்புணர்வில் ஈடுபட்டு தப்பியுள்ளார்.
தொடர்ந்து வெள்ளிக்கிழமை பகல், ஜேன் மற்றும் ஷெப்பர்ட் அவென்யூ வெஸ்ட் அருகே பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒருவர் பின்னால் இருந்து அவரை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்த இரு சம்பவங்களுக்கும் தொடர்பில்லை என்றே வெள்ளிக்கிழமை பொலிசார் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், சனிக்கிழமை பகல் ஆர்லெட்டா அவென்யூ மற்றும் ஸ்பென்வாலி டிரைவ் பகுதியில் மூன்றாவது பெண்ணும் வன்கொடுமைக்கு மர்ம நபரால் இலக்காகியுள்ளார்.
இதனிடையே, சனிக்கிழமை மாலை ரொறன்ரோ பொலிசார் வெளியிட்ட தகவலில், இந்த 3 வன்கொடுமை வழக்கு தொடர்பிலும் 24 வயதான avaughan Barnes என்ற இளைஞரை கைது செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
திங்களன்று இந்த வழக்கு தொடர்பில் அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளார். மேலும், இந்த 3 சம்பவம் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாருக்கு உதவ கேட்டுக்கொண்டுள்ளனர்.