இலங்கையின் இன்றைய வானிலை அறிக்கை
இலங்கையின் குறிப்பிட்ட சில பிரதேசங்களில் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியம் மற்றும் தென் அந்தமான் கடல் பிராந்தியத்தில் காற்று சுழற்சியுடன் கூடிய தாழமுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், வட அந்தமான் கடல் பிராந்தியத்திலும், நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் பகுதியிலும் வெவ்வேறான காற்று சுழற்சிகள் உருவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
குறித்த இரண்டு காற்று சுழற்சிகளும் தற்போது ஒன்றாக இணைந்து சற்று வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன.
வட மாகாணம்
இதன் காரணமாக இன்று (27.12.2023) வடக்கு மாகாணத்தில் மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அத்துடன் இது சில நாட்களுக்கு தொடரும் சாத்தியம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் மாவட்டங்களில் அவ்வப்போது இடையிடையே ஓரளவு மழை பொழியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.