பெண்கள் அரை நிர்வாணமாக நீந்த அனுமதி கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்
சுவிட்சர்லாந்தில் நீச்சல் தடாகங்களில் பெண்கள் அரை நிர்வாணமாக நீந்துவதற்கு அனுமதி வழ்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கோரியுள்ளார்.
சோசலிச ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தமாரா புனிசியாலோ ( Tamara Funiciello) இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
ஜெர்மனியின் கோட்டின்ஜனில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் அரவாணியொருவர் மேலாடையின்றி நீச்சல் தடாகத்தில் நீந்திய போது கடுமையான கண்டிக்கப்பட்டதனைத் தொடர்ந்து எழுந்த எதிர்ப்புக்களினால், அந்நாட்டில் தற்பொழுது பரீட்சார்த்த அடிப்படையில் பெண்கள் மேலாடையின்றி வார இறுதி நாட்களில் நீச்சல் தடாகங்களில் நீந்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவிதமான நடைமுறை சுவிட்சர்லாந்தில் பின்பற்றப்பட வேண்டுமென தமாரா கோரியுள்ளார். மேலாடை இன்றி நீச்சல் தடாகங்களில் இருப்பதற்கு பெண்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமெனவும், சுவிட்சர்லாந்தில் இவ்வாறான சட்டங்கள் அவசியமானது எனவும அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெண்கள் மேலாடையின்றி உலவித் திரியவும், நீந்தவும், சூரிய குளியல் போடவும் அனுமதி அளிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இவ்வாறு பெண்கள் தாங்கள் விரும்பியவாறு மேலடையின்றி இருப்பதற்கு அனுமதிப்பட வேண்டியதனை ஆதரிப்பதாக சூரிச் கான்டனின் சம சந்தர்ப்ப அலுவலகத்தின் பிரதானி ஹெலினா ட்ராச்செல் தெரிவித்துள்ளார்.
பெண்கள், ஆண்கள், மாற்று பாலினத்தவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஒரே சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டுமேன தெரிவித்துள்ளார்.