பூர்வக்குடி மக்களுக்கு எதிராக கூறிய கருத்தால் சிக்கலில் பாதிரியார்
கனடாவில் பூர்வக்குடி மக்களுக்கு எதிராக கருத்து தெரிவித்து கடும் எதிர்ப்பை எதிர்கொண்ட பாதிரியார் தமது பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.
சமீபத்தில் இரண்டு உண்டுறை பள்ளிகளில் இருந்து நூற்றுக்கணக்கான கல்லறைகள் கண்டெடுக்கப்பட்டது கனடா முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
குறித்த பள்ளிகளானது கத்தோலிக்க பாதிரியார்களின் கீழில் செயல்பட்டு வந்துள்ளதும், பின்னர் பெடரல் அரசாங்கம் கைப்பற்றியதும் வெளிச்சத்துக்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து திருத்தந்தை மன்னிப்பு கோர வேண்டும் என்ற கோரிக்கை பிரதமர் முதற்கொண்டு முன்வைத்தனர்.
இந்த களேபரங்களுக்கு நடுவே, கடந்த ஞாயிறன்று கத்தோலிக்க பாதிரியார் Monsignor Owen Keenan என்பவர் பூர்வக்குடி மக்களுக்கு எதிராக கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அதில் கத்தோலிக்க தேவாலயங்களுக்கு எதிராக மக்கள் கொந்தளிப்புடன் உள்ளனர். ஆனால் தொடர்புடைய பள்ளிகளுக்கு கத்தோலிக்க தேவாலயங்கள் செய்துள்ள நன்மைகளை அதே எண்ணிக்கையிலான மக்கள் நன்றி கூறுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கருத்தானது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவர் தமது பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.