சிறுவன் தொடர்பில் 20 ஆண்டுக்கு முன்னர் நடந்த சம்பவம்: கைதான ரொறன்ரோ நபர்
ரொறன்ரோவில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் சிறுவன் சீரழிக்கப்பட்ட விவகாரத்தில் பொலிசார் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ரொறன்ரோவில் வசிக்கும் 60 வயதான Warren Eugene என்பவரே கைதானவர். 2000 அல்லது 2003ல் குறித்த சிறுவனை நண்பனாக்கிக்கொண்ட Warren Eugene, தொடர்புடைய சிறுவனை பல முறை சீரழித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
மட்டுமின்றி Warren Eugene என்பவரால் அப்போது சீரழிக்கப்பட்ட பல சிறுவர்கள் இன்னமும் ரொறன்ரோவில் வசித்து வரலாம் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
விசாரணையின் ஒருபகுதியாக செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட Warren Eugene மீது 16 வயதுக்கு உட்பட்டவர்களுடன் உறவு வைத்துக் கொண்டதாக கூறி இதுவரை 5 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் 22ம் திகதி அவரை நீதிமன்றத்தின் முன் நிறுத்த உள்ளனர். இவர் தொடர்பில் அல்லது இவரால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பின் பொலிசாரை நாட அதிகாரிகள் தரப்பு கேட்டுக்கொண்டுள்ளது.