ரொறன்ரோவை உலுக்கிய சம்பவம்: தேடப்படும் பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்ட பொலிஸார்
கனடாவின் நகரத்தில் சூட்கேசில் பெண்ணொருவரின் உடல் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய தேடப்படும் பெண்ணின் அடையாளத்தை ரொறன்ரோ பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
ரொறன்ரோவில் மேற்கு முனையில் கீலே தெரு மற்றும் ஹிலாரி அவென்யூ அருகே கடந்த புதன்கிழமை சூட்கேசில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டது.
இதேவேளை இச்சம்பவத்துடன் தொடர்புடைய பெண் தொடர்பில் ரொறன்ரோ பொலிஸார் தகவலை வெளியிட்டுள்ளனர்.
காலிடனைச் சேர்ந்த 41 வயது வர்ஷா கஜூலா என்பவரே குறித்த சூட்கேசில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும் இக்கொலையுடன் தொடர்புடைய இரண்டு ஆண்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு பெண்ணை தேடி வருகின்றனர்.
கரிட்டா ஜக்சன் என்ற அந்த பெண் பற்றிய தகவல் தெரிந்தவர்களின் உதவியை ரொறன்ரோ பொலிஸார் கோரியுள்ளனர்.