Omicron தொற்று தொடர்பில் ரொறன்ரோ நிர்வாகம் வெளியிட்ட தகவல்
ரொறன்ரோவில் Omicron தொற்றுடன் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறுதி செய்யப்பட்ட மூவரில் இருவர் சமீபத்தில் மேற்கு ஆபிரிக்க நாடான நைஜீரியா சென்று திரும்பியதாகவும் இன்னொருவர் சுவிட்சர்லாந்திற்கு சென்று திரும்பியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை வரையிலான தரவுகளின் அடிப்படையில் இவர்கள் மூவர் மட்டுமே Omicron தொற்று தொடர்பில் ரொறன்ரோவில் உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மூவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து தற்போது அடையாளம் காணப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இதனிடையே, சர்வதேச விமான சேவைகளை தடை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தொற்றுநோயியல் நிபுணர் அன்னா பானர்ஜி,
மொத்த உலகமும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ளதால், தென்னாபிரிக்காவில் இருந்து ஒருவர் உலகின் எந்த மூலைக்கும் செல்லலாம்.
மேலும், Omicron தொற்று தொடர்பில் தீவிர ஆய்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.