கனடா-ஸ்காபரோவில் அதிகாலையில் இளைஞனுக்கு நேர்ந்த துயரம்!
கனடா-ஸ்காபரோவில் உள்ள பிளாசா ஒன்றில் அதிகாலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார்.
இன்று அதிகாலை 3 மணியளவில் மார்னிங்சைட் மற்றும் ஷெப்பர்ட் அவென்யூவில் உள்ள ஒரு பிளாசாவின் வாகன நிறுத்துமிடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக டொராண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இருவரைக் கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் 30 வயதுடைய இளைஞர் சிறிது நேரத்தில் இறந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இந்த சம்பவத்தில் மற்றைய 20 வயதுடைய இளைஞருக்கு உயிருக்கு ஆபத்தான காயங்கள் எதுவும் இல்லை என தெரிவித்த டொராண்டோ பொலிஸார் , சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.