கையில் பாணுடன் இரத்த வெள்ளத்தில் தந்தை; கதறி அழும் மகள்; உக்ரைனில் தொடரும் சோகம்
உக்ரைனில் மகளுக்காக பாண் வாங்க வீட்டை விட்டு வெளியே வந்த தந்தை ஷெல் தாக்குதலால் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கார்க்கிவ் நகரில் வாழும் Victor Gubarev எனும் 79 வயது நபர், தனது மகள் Yana Bachek-வுக்காக பாண் வாங்க வீட்டை விட்டு தனியாக வெளியே சென்றிருக்கிறார்.
எனினும் வெளியே சென்ற அவர் சில மணிநேரங்கள் ஆகியும் அவர் விடு திரும்பாததால், யானா வெளியே வந்து பார்த்தபோது ஒரு இடத்தில் கூட்டமாகவும், அருகில் அவசர ஊர்தியும் நின்றுகொண்டிருந்தது.
பீதியடைந்த யானா அங்கு பயத்துடன் சென்று பார்த்த போது, Victor Gubarev கையில் தனக்காக வாங்கிவந்த பாணுடன் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார். ரஷ்யர்கள் நடந்திய ஷெல் தாக்குதலில் ,ஷெல்லின் ஒரு பாகம் சிதறி விக்டர் மீது பாய்ந்து அவர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் தனது தந்தையை பார்த்து யானா கதறி அழுத புகைப்படம் இணையத்தில் வெளியாகி பார்ர்போரை கண்கலங்க வைத்துள்ளது.