ரஷ்ய தாக்குதலில் தாய்கும் குழந்தைக்கும் நேர்ந்த சோகம்!
ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் தாய் மற்றும் குழந்தை கொல்லப்பட்ட சம்பவம் உக்ரைனில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
உக்ரைனில் கருங்கடல் துறைமுக நகரான ஒடேசா நகரில் நேற்று முன்தினம் 14 தளங்களைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது.
இதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த தாக்குதல்களில் 8 பேர் கொல்லப்பட்டதாக நேற்று தகவல்கள் வெளியாகின.
இதன்போது கொல்லப்பட்டவர்களில் பிறந்து 3 மாதமே ஆன ஒரு பெண் குழந்தையும், அந்தக் குழந்தையின் தாயும் அடங்குவார்கள்.
அந்தத் தாயின் பெயர் வலேரியா குளோடன்(Valeria Cloton). குழந்தையின் பெயர் கிரா. குழந்தை கிராவின் பாட்டியும், இந்த தாக்குதலில் கொல்லப்பட்டு விட்டார்.
ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்ட தன் அன்பு மனைவி வலேரியா(Valeria Cloton), மகள் கிரா படங்களை வலேரியாவின் கணவர் யூரி சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார். அதைக்கண்டு எல்லோரும் அனுதாபம் தெரிவித்து வருகின்றனர்.
