ஜெர்மனியில் போராட்டத்தில் களமிறங்கவுள்ள போக்குவரத்து ஊழியர்கள்!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் ஆகப்பெரிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
அதிகரிக்கும் விலைவாசியைச் சமாளிக்க சம்பளத்தை உயர்த்தித் தரவேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாகும்.
அதன்படி விமான நிலையங்கள், துறைமுகங்கள், ரயில் நிலையங்கள், பேருந்துகள் ஆகிய போக்குவரத்துக் கட்டமைப்புகளைச் சேர்ந்த ஊழியர்கள் 24 மணி நேரத்துக்கு வேலைகளை நிறுத்தத் திட்டமிட்டுள்ளனர்.
அதனால் 380,000க்கும் அதிகமான விமானப் பயணங்கள் பாதிக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியின் இரண்டாம் ஆகப்பெரிய வர்த்தகத் தொழிற்சங்கமான வெர்டியில் (Verdi) சுமார் 2 மில்லியன் ஊழியர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
அவர்கள் மாதச் சம்பளத்தைப் பத்தரை விழுக்காடு உயர்த்தும்படி கோரியுள்ளனர்.
ரயில், போக்குவரத்துத் தொழிற்சங்கத்தில் 230 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருக்கின்றனர்.
மேலும் அதிகச் சம்பளத்தால் போக்குவரத்துக் கட்டணங்களும் வரிகளும் உயரும் என்று முதலாளிகள் எச்சரித்துள்ளனர்.