ரொறன்ரோவில் வீடற்றவரை கொலை செய்த சிறுமியருக்கு எதிராக வழக்கு
ரொறன்ரோவில் வீடற்றவர் ஒருவரை படுகொலை செய்த சம்பவம் குறித்த வழக்கு இன்று ஆரம்பமானது.
இரண்டு பதின்ம வயதுடைய சிறுமிகள் இந்த படுகொலை சம்பவத்தை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வீடற்ற நபர் ஒருவரை கொடூரமாக தாக்கி படுகொலை செய்ததாக இந்த இரண்டு பதின்ம வயதுடைய சிறுமிகள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த நபர் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் படுகொலை செய்யப்பட்டிருந்தார். 59 வயதான கெனத் லீ என்ற நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் 13 முதல் 16 வயதுடைய 8 சிறுமியர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த கைதுகளில் இரண்டு சிறுமியருக்கு எதிராக நேரடி கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.