தேர்தல் பரப்புரையை தொடங்கும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ: வெளியாகும் முக்கிய தகவல்
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று பகல் கவர்னர் ஜெனரலை நேரில் சந்தித்து பாராளுமன்றத்தை கலைக்க கோரிக்கை வைப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து தேர்தல் பரப்புரைக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
ஞாயிற்றுக்கிழமை பகல் 10 மணியளவில் கவர்னர் ஜெனரல் மேரி சைமனின் உத்தியோகப்பூர்வ இல்லத்திற்கு மனைவி சோபியாவுடன் செல்லும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அவரிடம் முறைப்படி பாராளுமன்றத்தை கலைக்கும் கோரிக்கையை முன்வைக்க உள்ளார்.
இதனையடுத்து பத்திரிகையாளர் சந்திப்பில் உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படும். தேர்தல் நாள் தொடர்பில் இதுவரை திகதி ஏதும் குறிப்பிடப்படாத நிலையில், செப்டம்பர் 20ம் திகதி கனேடிய மக்கள் வாக்களிப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் நாடு முழுவதும் நான்காவது அலை தொடர்பிலான அச்சம் எழுந்துள்ள நிலையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் தேர்தல் முன்னெடுக்கும் முயற்சி எதிர்க்கட்சிகளால் கடுமையான விமர்சனங்களுக்கு இலக்காகியுள்ளது.
இருப்பினும், இந்த இக்கட்டான சூழலில் ட்ரூடோவின் ஆட்சியை மக்கள் மதிப்பிட இது ஒரு வாய்ப்பாக அமையும் என லிபரல் கட்சியினர் கூறுகின்றனர்.