திட்டமிட்டபடி ஆப்கானில் இருந்து படைகள் வெளியேறும்; பைடன் திட்டவட்டம்
திட்டமிட்டப்படி ஆப்கானிஸ்தானிலிருந்து ஆகஸ்ட் 31 ஆம் திகதிக்குள் அமெரிக்க படைகள் வெளியேறும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
தலிபான்கள், ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு, அங்கிருந்து வெளிநாட்டினரும், அச்சம் காரணமாக ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தர்களும் வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில் காபூலில் செய்தியாளர்களிடம் பேசிய தலிபான்கள், அமெரிக்கப் படைகள் திட்டமிட்டப்படி ஆப்கானில் இருந்து வெளியேற வேண்டும் என்றனர். அத்துடன் , ஆகஸ்ட் 31 ஆம் திகதிக்குப் பிறகு, ஆப்கானிஸ்தர்கள் வெளியேற தடைவிதிக்கப்படும் என்றும் கூறினர்.
இந்நிலையில், ஆப்கான் விவகாரம் குறித்து நடைபெற்ற ஜி7 மாநாடு நடைபெற்றது. ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவதற்கான காலகெடுவை நீட்டிக்க வேண்டும் என பிரிட்டிஷ், பிரான்ஸ் நாடுகள் கோரிக்கைவிடுத்தன.
எனினும் அதை ஏற்க மறுத்த பைடன், திட்டமிட்டப்படி ஆகஸ்ட் 31 ஆம் திகதிக்குள் அமெரிக்க படைகள் வெளியேறும் என கூறியுள்ளார்.
இதேவேளை ஆப்கானில் ஆட்சி அதிகாரத்தை கவனிப்பதற்காக 12 பேர் கொண்ட குழுவை தலிபான்கள் அமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.