கனடாவை உலுக்கிய சாலை விபத்து... ஒரே குடும்பத்தில் மூவர் உட்பட 4 பெண்கள் பலியான சோகம்
கனடாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் கொல்லப்பட்ட மிக மோசமான சாலைவிபத்தை ஏற்படுத்திய லொறி சாரதியை நீதிமன்றம் குற்றவாளி என உறுதி செய்துள்ளது.
பிரதான சாலை 400-ல் 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடுங்க வைக்கும் இந்த மோசமான சாலை விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த கோர சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறை பெண்கள் பரிதாபமாக பலியானார்கள்.
இந்த வழக்கில் வின்னிபெக் பகுதியை சேர்ந்த 40 வயதான சர்ப்ஜித் சிங் மாதரு (Sarbjit Singh Matharu) குற்றவாளி என ஒன்ராறியோ உயர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.
சம்பவத்தன்று, நீண்ட 28 மணி நேர பயணத்தின் இடையே சாரதி மாதரு வெறும் 2 மணி நேரம் மட்டுமே தூங்கி ஓய்வெடுத்துள்ளார் எனவும்,
சாலை விபத்து ஏற்படும்போது, மாதரு மொபைல் அழைப்பில் பேசிக்கொண்டிருந்ததாகவும், இதில் கட்டுப்பாட்டை இழந்த அவரது லொறி மோதியதில்,
வரிசையாக 11 கார்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டதாகவும், பின்னர் தீப்பிழம்பாக மாறியது எனவும் விசாரணையில் உறுதியானது.
ஆனால், தாம் போதுமான அளவுக்கு ஓய்வெடுத்திருந்ததாகவும், உரிய நேரத்தில் சரக்கை ஒப்படைக்க வேண்டும் என்பதால் மன அழுத்தம் இருந்ததாகவும் சாரதி மாதரு தெரிவித்திருந்ததை நீதிபதிகள் ஏற்க மறுத்துள்ளனர்.
இந்த விபத்தில் 27 வயது Maria Lipska, Valbona Vokshi(35), இவரது 5 வயது மகள் Isabela Kuci மற்றும் 55 வயதான Xhemile Vokshi ஆகியோர் மரணமடைந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பில் சாரதி மாதரு அளித்த வாக்குமூலமானது 11 பேர்களின் நேரடி சாட்சியங்களுக்கு முரணாக இருந்தது என்பதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மாதரு தற்போது பிணையில் இருப்பதால் காணொளி காட்சி மூலம் நீதிமன்ற விசாரணையில் கலந்து கொண்ட்டுள்ளார்.
மேலும், ஜூன் மாதம் தீர்ப்பு நாளில் அவர் நேரிடையாக நீதிமன்றத்தில் ஆஜராவார் என கூறப்படுகிறது.