கனடாவில் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத அரசு ஊழியர்களுக்கு ட்ரூடோ எச்சரிக்கை
கனடாவில் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத அரசு ஊழியர்கள் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என கனடாவின் லிபரல் கட்சித் தலைவரான ஜஸ்டின் ட்ரூடோ எச்சரித்துள்ளார்.
கனடா லிபரல் கட்சித் தலைவரான ஜஸ்டின் ட்ரூடோ, அனைத்து அரசு ஊழியர்களும் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ள அரசு வற்புறுத்தும் என்றும், மறுப்பவர்கள் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் உரையாற்றிய ட்ரூடோ, அரசு ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை என்று கூறியதுடன், தடுப்பூசி பெறாத ஒருவர், அதற்கு முறையான மருத்துவக் காரணம் ஒன்றைத் தெரிவிக்காவிட்டால், அவர் பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றார்.
என்றாலும், என்ன விதமான தண்டனை அளிக்கப்படும் என்பது குறித்து அவர் எதுவும் விளக்கவில்லை.
கனடாவில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதால் ஜஸ்டின் ட்ரூடோ இப்போது லிபரல் கட்சித் தலைவர் என்று மட்டுமே அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.