எச்-1பி விசா திட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்த டிரம்ப்; இந்தியர்களுக்கு நெருக்கடி
எச்-1பி விசா திட்டத்தில் பெரும் மாற்றங்களை கொண்டுவர அமெரிக ஜனாதிபதி தலமையிலான டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
ஆரம்பத்தில் கட்டணத்தை $100,000 ஆக உயர்த்துவது குறித்த செய்திகளுக்கு பிறகு, தற்போது விசா பயன்பாடு மற்றும் தகுதிகள் மீதான கூடுதல் குடியேற்ற கட்டுப்பாடுகளை விதிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை முன்மொழிந்துள்ளது.
இந்திய மாணவர்களையும் இளைஞர்களையும் பாதிக்கும்
இந்தச் சீர்திருத்தங்கள், திட்டத்தின் ஒருமைப்பாட்டை மேம்படுத்தவும், அமெரிக்க தொழிலாளர்களின் ஊதியங்களை பாதுகாக்கவும் நோக்கம் கொண்டுள்ளன. புதிய கட்டுப்பாட்டின்படி வருடாந்திர விசா உச்சவரம்பிலிருந்து விலக்கு அளிக்கப்படும் தகுதிகள் மறுபரிசீலனை செய்யப்படலாம்.
இது பல்கலைக்கழகங்கள் மற்றும் லாப நோக்கற்ற நிறுவனங்களை பாதிக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. விதிமுறைகளை மீறியுள்ள முதலாளிகள் மற்றும் மூன்றாம் தரப்பு வேலைவாய்ப்புகள் மீதான மேற்பார்வை அதிகரிக்கப்படும்.
எச்-1பி விசா, அதிகத் திறன் கொண்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு அமெரிக்காவில் நீண்ட கால பணிக்கு இன்றியமையாதது. அதேவேளை 2023-ல் அங்கீகரிக்கப்பட்ட விசாக்களில் கிட்டத்தட்ட முக்கால்வாசி பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாற்றங்கள் அமெரிக்காவில் பணியாற்ற விரும்பும் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களையும் இளைஞர்களையும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம் இந்த புதிய விதி மாற்றங்கள் டிசம்பர் 2025-ல் வெளியிடப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.