வெனிசுலாவில் எண்ணெய் வர்த்தகம் குறித்து ட்ரம்ப் அறிவிப்பு
வெனிசுலாவின் எண்ணெய் வணிகம் நீண்ட காலமாகவே நலிவடைந்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அந்நாட்டின் மோசமாக சேதமடைந்த எண்ணெய் உள்கட்டமைப்பை சீரமைக்க, அமெரிக்காவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்கள் நேரடியாக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக பில்லியன் கணக்கான டொலர்கள் முதலீடு செய்யப்படும் என்றும், உள்கட்டமைப்பு சீரமைப்பின் மூலம் வெனிசுலாவிற்கு வருவாய் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை உலக எண்ணெய் சந்தையில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெனிசியூலாவில் ஆட்சி நிர்வாகத்தை அமெரிக்கா பின்னின்று மேற்கொள்ளுமென்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
வெனிசியூல இராணுவ நடவடிக்கையின்பின்னர் ஆற்றிய உரையில் அவர் மேலும் கூறியதாவது, பாதுகாப்பான, முறையான மற்றும் நியாயமான மாற்றத்தை நாங்கள் செய்யக்கூடிய காலம் வரும் வரை நாங்கள் அங்கு ஆட்சியை நடத்தப் போகிறோம்.
எனவே வேறு யாராவது இதில் ஈடுபடுவதை நாங்கள் விரும்பவில்லை, கடந்த நீண்ட காலமாக நாங்கள் கொண்டிருந்த அதே நிலைப்பாட்டை நாங்கள் கொண்டுள்ளோம். வெனிசுலாவின் மக்களுக்கு அமைதி, சுதந்திரம் மற்றும் நீதியை நாங்கள் வழங்க விரும்புகிறோம்.
வெனிசுலாவில் எண்ணெய் வணிகம் நீண்ட காலமாகவே நலிவடைந்துள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். நமது மிகப் பெரிய அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் உள்ளே சென்று, பில்லியன் கணக்கான டொலர்களை செலவழித்து, மோசமாக சேதமடைந்த உள்கட்டமைப்பை சரிசெய்து, நாட்டிற்கு பணம் சம்பாதிக்கத் தொடங்கப் போகிறோம்.
எனது வழிகாட்டுதலின் பேரில், அமெரிக்க ஆயுதப்படைகள் வெனிசுலாவின் தலைநகரில் ஒரு அசாதாரண இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டன.இது அமெரிக்க வரலாற்றில் அமெரிக்க இராணுவ வலிமை மற்றும் திறமையின் மிகவும் அதிர்ச்சியூட்டும், பயனுள்ள மற்றும் சக்திவாய்ந்த வெளிப்பாடுகளில் ஒன்றாகும் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.