ட்ரம்ப் மகனின் சூசகம் ; தந்தையைத் தொடர்ந்து ஆட்சி யாருக்கு?
தனது தந்தையின் இரண்டாவது பதவிக்காலம் நிறைவடைந்ததும், தானோ அல்லது மற்றொரு ட்ரம்ப் குடும்ப உறுப்பினரோ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மகன் எரிக் ட்ரம்ப் தெரிவித்தார்.
அவர் நேர்காணல் ஒன்றின் போது இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டி
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் 2வது முறையாகப் பதவி வகித்து வருகின்றார். இந்தநிலையில் டொனால்ட் ட்ரம்பின் இரண்டாவது பதவிக் காலத்திற்குப் பின்னர் ட்ரம்ப் குடும்பம் மீண்டும் அரசியலில் நுழைய முடியும் என எரிக் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பொது வாழ்க்கையில் நுழைவது குறித்து இன்னும் முடிவு செய்யாமல் இருந்தாலும், அரசியல் பாதை தனக்கு எளிதானது என்றும், அரசியலில் இலாபம் ஈட்டாத ஒரு குடும்பம் இருந்தால், அது ட்ரம்ப்பின் குடும்பம் தான், என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், எரிக் ட்ரம்ப் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க வாய்ப்புள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.