டொரண்டோவில் சிறுவர்கள் மேற்கொண்ட மோசமான செயல்
டொரண்டோவில் உள்ள ரிவர்டேல் பகுதியில் 20வயதான ஒருவரை சிறுவர்கள் கத்தியல் குத்தி காயப்படுத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலை நடத்திய 14 மற்றும் 15 வயதுடைய சிறுவர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.
கார்லாவ் மற்றும் பேன் அவென்யூ அருகிலுள்ள வித்ரோ பூங்காவில் அதிகாலை வேளையில் இந்த கத்தி குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அப்பகுதியில் பட்டாசு வெடிக்கவந்த சிறுவர்களுக்கும், 20வயதுடைய அந்த நபருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பின்னர், அந்த இளைஞர்கள் குழு அவரை தாக்கி கத்தியால் குத்திவிட்டு, டான்ஃபோர்த் அவென்யூ நோக்கி தப்பி ஓடியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது நிலை கவலைக்கிடமாக இல்லையென்றாலும், காயம் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது.
சம்பவத்தில் குறைந்தபட்சம் நால்வர் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுகின்றனர். அவர்கள் அனைவரும் கருப்பு உடைகள் மற்றும் முகமூடிகள் அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது.