ரஷ்யா மீது மிகப்பெரிய அளவில் பொருளாதார தடை ; டிரம்ப் மிரட்டல்
உக்ரைனுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்படும் வரை, ரஷ்யா மீது மிகப்பெரிய அளவில் பொருளாதார தடைகளையும், அதிகளவு வரிகளையும் விதிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதியாக பதவியேற்றதிலிருந்து ரஷ்யாவுக்கு ஆதரவான கருத்துக்களை முன்வைத்திருந்த டொனால்ட் ட்ரம்ப் நேற்றைய தினம் (07.03.2025) செய்தியாளர்களிடம் கருத்துரைத்த போது குறித்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனின் வலுசக்தி அமைப்புகளை இலக்கு வைத்து ரஷ்யா தாக்குதலை நடத்தியிருந்தது.
இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் மற்றும் வரிகளை விதிப்பது தொடர்பில் பரிசீலிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், ரஷ்யாவின் தாக்குதல் நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.