உலக நாடுகளை மிரட்டும் ட்ரம்ப்; வெனிசுலாவில் எண்ணெய் வாங்கினால் 25 சதவீதம் வரி
வெனிசுலாவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் புதிய அதிபராக கடந்த ஜனவரியில் டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். அப்போது முதல், பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு புதிய வரி விதிப்புகளை விதித்து வருகிறார் ட்ரம்ப்.
ட்ரம்பின் வரி விதிப்பு
இந்நிலையில் வெனிசுலா மீது அமெரிக்கா 2-வது தவணையாக கூடுதல் வரி விதிப்பை அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்கா, வெனிசுலா ஆகிய 2 நாடுகளுக்கு இடையேயான மோதல் நீண்டகாலமாக நடந்து வரும் சூழலில் அதிக அளவில் குற்றவாளிகளையும், போதை பொருட்களையும் அமெரிக்காவுக்கு கடத்த வெனிசுலா உறுதுணையாக இருப்பதாக அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டி வருகிறார்.
ஏற்கெனவே வெனிசுலா மீது கூடுதல் வரியை அமெரிக்கா விதித்திருந்த நிலையில் தற்போது 2-வது தவணையாக 25 சதவீத கூடுதல் வரியை அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். வரும் 2-ம் தேதி முதல் புதிய வரிவிதிப்பு நடைமுறைக்கு வரும் என்றும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.