கனேடிய பேருந்து சாரதி வெளிநாட்டில் கொரோனாவுக்கு பலி: அதிர்ச்சியில் சக ஊழியர்கள்
TTC பேருந்து சாராதி ஒருவர் புதன்கிழமை அதிகாலை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு பாகிஸ்தானில் இருந்தபோது மரணமடைந்துள்ளார்.
Amalgamated Transit Union-ஐ சேர்ந்த 61 வயதான ஜாகீர் மஹ்மூத் என்பவரே பாகிஸ்தான் சென்ற நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளார்.
வில்சன் பிரிவில் சாரதியாக செயல்பட்டு வங்துள்ள ஜாகீர் மஹ்மூத், 2013-ல் இருந்தே TTC-ல் பணியாற்றி வந்துள்ளார். மஹ்மூதின் சடலம் பாகிஸ்தானில் உள்ள லாகூரிலேயே நல்லடக்கம் செய்யப்படும் என ஒன்றிய நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
ATU Local 113 என்கிற தொழிற்சங்கமானது Toronto மற்றும் யார்க் பிராந்தியம் முழுவதும் 12,000 பொது போக்குவரத்து தொழிலாளர்களைக் கொண்டுள்ளது.
கொரோனாவுக்கு வட அமெரிக்கா முழுவதும் 150 உறுப்பினர்களை இழந்துவிட்டதாக ATU தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
TTC-ஐ பொருத்தமட்டில் கொரோனாவுக்கு பலியாகும் இரண்டாவது நபர் மஹ்மூத் என கூறப்படுகிறது.
கடந்த டிசம்பர் 31-ல் Joe Sotittle என்பவர் கொரோனாவுக்கு பலியானதாக முன்னர் தெரிவித்திருந்தனர்.