துருக்கி பூகம்பத்தில் சிறுமி உயிரிழப்பு; 69 பேர் காயம்
துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத்தில் 14 வயது சிறுமி உயிரிழந்ததாகவும், மேலும் 69 பேர் காயமடைந்ததாகவும் துருக்கிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கிரீஸ் நாட்டின் டோடெக்கனீஸ் தீவுகள் பகுதியில் செவ்வாய்க்கிழமை (03) அதிகாலையில் பூகம்பம் ஏற்பட்டது. ரிச்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவான இந்த பூகம்பம் பல்கேரியா, சைப்ரஸ், துருக்கியே, எகிப்து, பியா, சிரியா, யுனைடெட் கிங்டம் மற்றும் வடக்கு மாசிடோனியா பகுதிகளிலும் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத்தில் சிறுமி அதிர்ச்சிக்குள்ளான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார் என துருக்கி உள்நாட்டு அமைச்சர் அலி யெர்லிகாயா தெரிவித்துள்ளார்.
பலர் வலுவான நில அதிர்வால் ஏற்பட்ட பீதியால் உயரமான இடங்களிலிருந்து குதித்தமையால் காயமடைந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் ரோட்ஸில் காயமடைந்தவர்கள் மற்றும் பொருள் சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை