உரிமையாளரை தவிர வேற யாராச்சும் தொட்டா கடிக்கும் கல்லாபெட்டிக் காவலன் அணில்!
துருக்கியில் உரிமையாளரின் கடையில் உலாவரும் அணில், கல்லாப்பெட்டியை கரிசனத்துடன் பார்த்துக்கொள்ளும் செயல் பார்வையாளர்களை வியக்கவைக்கிறது.
டையார்பாகிர் (DIYARBAKIR) நகரில் நகைக்கடை வைத்திருக்கும் மெஹ்மத் யுக்செல் ( Mehmet Yuksel) என்பவர், மெமோகன் (MEMOCAN)என்ற அணில் ஒன்றை வளர்த்துவருகிறார்.
கடையின் கல்லாப்பெட்டியில் குடிக்கொண்டிருக்கும் மெமோகன், மெஹ்மத்தை தவிர வேறு யாராவது பணத்தை எடுக்க வந்தால், கடித்துவிடுகிறது. நகைகளையும் பணத்தையும் உன்னிப்பாக கவனித்துவரும் மெமோகனுடன் கடைக்கு வரும் குழந்தைகள் உற்சாகமாக விளையாடிகின்றனர்.