இரண்டு போர் விமானங்கள் விபத்து; 100 கிமீ தொலைவில் விழுந்த சிதைவுகள்
இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான இரண்டு போர் விமானங்கள் விபத்துக்குள்ளாகின. விமானப் படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நடைபெற்றுள்ளது.
விபத்துக்குள்ளான விமானங்களில் ஒன்று சுகோய் 30 ரக விமானம் என்றும் மற்றொன்று மிராஜ் 2000 ரக போர் விமானம் என்பதும் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
விமானி பலி
இந்த விபத்தில் விமானி ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய விமானப்படையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு விமானிகள் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தின் மொரேனாவில் விபத்துக்குள்ளான போர் விமானங்களின் சிதைவுகள் விபத்து நடந்த இடத்திலிருந்து 100 கிமீ தொலைவில் ராஜஸ்தானின் பரத்பூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.