பிரித்தானியா எதிர்கொள்ளவுள்ள இரு பாரிய பிரச்சனைகள்!
பிரித்தானியாவில் இன்னும் இரண்டே நாட்களில் உணவு தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க அதிரடி நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிரித்தானியாவில் கார்பன் டை ஆக்சைடு (CO2) மற்றும் எரிவாயு பற்றாக்குறை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உணவுக்காக விலங்குகளை கொல்வதற்கு முன்பு அவற்றை மயக்கமடைய வைக்கவும், உணவுகளை கெடாமல் வைத்திருக்கவும் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் பெரும்பாலும் கார்பன் டை ஆக்சைடை (CO2) பயன்படுத்தப்படுத்துகின்றன.
இந்நிலையில் உலகளாவிய பொருளாதாரம் COVID-19 தொற்றுநோயிலிருந்து மீண்டு வருவதால், பிரித்தானியாவில் இந்த ஆண்டு 3 மடங்கு எரிசக்தி தேவை அதிகரித்துள்ளது. எரிவாயு விலையேற்றம் காரணமாக பிரித்தானியாவிற்கு தேவையான 60 சதவீத கார்பன் டை ஆக்சைடு உற்பத்தி செய்யும் 2 உர ஆலைகள் தற்காலிகமாக மூடப்பட்டதனால், உணவு தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் பிரித்தானியாவை தற்போது திக்குமுக்காட வைத்துள்ளது.
இந்த நிலையில், மிகுந்த செலவில் மீண்டும் CO2 உற்பத்தியை உயர்த்த அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பிரித்தானியாவின் வணிக செயலாளர் குவாசி குவார்டெங் (Kwasi Kwarteng) தெரிவித்துள்ளார்.
அத்துடன் இன்னும் ஓரிரு நாட்களில் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என அவர் கூறினார். கார்பன் டை ஆக்சைடு விநியோகத்தை அதிகரிக்க, CF உரம் தயாரிக்கும் நிறுவங்களுக்கு உற்பத்திக்கு மானியம் வழங்குவது உட்பட பல்வேறு விருப்பங்களை அரசாங்கம் விவாதித்து வருவதாக குவார்டெங் கூறினார்.
மேலும் இந்த நடவடிக்கைளை மேற்கொள்ள மக்களின் வரிப்பணத்திலிருந்து பெருந்தொகை பயன்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.