பிரான்ஸில் குரங்கு அம்மை பாதிப்பால் இருவர் ஆபத்தான நிலையில்
பிரான்ஸில் குரங்கு அம்மை பாதிப்பால்ல இருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக பிரான்ஸ் தகவல்கள் கூறுகின்றன. இருவருக்கும் பரிசில் உள்ள Bichat மருத்துவமனையில் வைத்து தடுப்பூசி போடப்பட்டதாகவும், தடுப்பூசி போடப்பட்ட இருவரும் மிக ஆபத்தான உடல்நிலையுடன் காணப்படுவதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
இந்நிலையில் பிரான்சில் முதன் முறையாக குரங்கு அம்மை அடையாளம் காணப்பட்ட நபருடன் மேற்குறித்த இருவரும் உடல்ரீதியான நெருங்கிய தொடர்பில் இருந்ததாக தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட இருவரும் 30 இல் இருந்து 40 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் 20ஆம் திகதி பிரான்ஸில் உறுதி செய்யப்பட்ட முதல் நோயாளியுடன் ஒருவர் தொடர்பில் இருந்துள்ளார் என தெரியவந்துள்ளது. கிட்டத்தட்ட 3 மணித்தியாலங்கள் தொடர்பில் இருந்த நிலையில் அந்த நபருக்கு குரங்கமை தொற்றியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
செவ்வாயன்று வெளியிடப்பட்ட சுகாதார உயர் ஆணையத்தின் கருத்திற்கமைய, இது மிகவும் இலக்கு வைக்கப்பட்ட தடுப்பூசியாகும், இது ஆபத்தில் இருப்பதாகக் கருதப்படும் நபர்களுக்கு வழங்கப்படுகிறதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை குரங்கு அம்மை தொற்றுக்குள்ளானவர்கள் 6 இல் இருந்து 21 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் (WHO) பரிந்துரை செய்துள்ளது.
மேலும் பிரான்சில் இதுவரை 7 பேருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் உலகம் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து இன்னும் முழுவதுமாக விடுவிக்கபடாத நிலையில் தற்போது உலக மக்களுக்கு குறங்கம்மை பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.