கனடாவில் மீன்பிடி படகு மூழ்கி விபத்து - நீரில் தவித்த இருவர் மீட்பு!
கனடாவின் ட்ஸவாசென் படகு முனையம் அருகே மீன்பிடிப் படகு ஒன்று மூழ்கியதில், கடலில் தவித்த இருவர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் உயிருடன் மீட்கப்பட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:20 மணியளவில் ட்ஸவாசென் முனையம் அருகே இருவர் நீரில் தவிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பி.சி. ஃபெரிஸ் நிறுவனத்தின் 'ஸ்பிரிட் ஆஃப் பிரிட்டிஷ் கொலம்பியா' மற்றும் 'கோஸ்டல் ரெனடைசன்ஸ்' ஆகிய இரு கப்பல்களிலிருந்தும் மீட்புப் படகுகள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டன.

மூழ்கிய மீன்பிடிப் படகில் இருந்த இருவரையும் மீட்டு, ட்ஸவாசென் முனையத்திற்குப் பத்திரமாகக் கொண்டு வந்தனர்.
பி.சி. அவசர மருத்துவ உதவி சேவை மற்றும் உள்ளூர் காவல்துறை சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
முனையத்தில் முதலுதவி அளிக்கப்பட்ட பின், இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
தற்போது இருவரது உடல்நிலையும் சீராக உள்ளது. இந்த மீட்பு நடவடிக்கை காரணமாக ட்ஸவாசென் மற்றும் டியூக் பாயிண்ட் இடையேயான படகு சேவைகளில் தாமதம் ஏற்பட்டது.