தற்செயலாக துப்பாக்கி வெடித்ததில் இளைஞர்களுக்கு நேர்ந்த விபரீதம்
கனடாவின் அஜாக் பிரதேசத்தில் தற்செயலாக துப்பாக்கி வெடித்ததில் இரண்டு பதின்ம வயதினர் காயமடைந்துள்ளனர்.
17 வயதான இளைஞர் ஒருவரும் 18 வயதான யுவதி ஒருவரும் இந்த சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
[VHS6AL ]
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி போலீஸ் விசாரணைகளின் போது பொய்யான தகவல்களை வழங்கியதாக மர்க்கம் பிராந்திய போலீசார் தெரிவிக்கின்றனர்.
தற்செயலாக இளைஞர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவரும் குறித்த யுவதியும் காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் இடம்பெற்ற வீட்டில் துப்பாக்கி வைத்திருப்பதற்கான அனுமதிப்பத்திரம் எவரிடமும் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அனுமதி பத்திரம் என்றே ஆயுதங்கள் வைத்திருந்தமை தொடர்பில் இரண்டு பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
கவனயீனமாக ஆயுதத்தை பயன்படுத்தியமை உள்ளிட்ட இரண்டு குற்றச்சாட்டுகள் 17 வயது இளைஞன் மீது சுமத்தப்பட்டுள்ளது இந்த சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் அது குறித்து அறிவிக்குமாறு போலீசார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்