ஆப்கானில் கொல்லப்பட்ட அமெரிக்க படையினர்; அமெரிக்கா பதிலடி
ஆப்கானின் கிழக்கு பகுதியில் ஐஸ்ஐஎஸ் அமைப்பின் திட்டமிடல் பிரிவை சேர்ந்த ஒருவரை இலக்குவைத்து அமெரிக்கா ஆளில்லா விமானதாக்குதலை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கான் விமானநிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற குண்டுதாக்குதலில் அமெரிக்க படையினர் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளதை தொடர்ந்தே அமெரிக்கா, ஐஎஸ் அமைப்பின் மீது ஆளில்லா விமானதாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் ம்கூறப்படுகின்றது.
இந்நிலையில் காபுலிற்கு கிழக்காக பாகிஸ்தான் எல்லையில் உள்ள நங்கர்ஹர் பிராந்தியத்தில் ஆளில்லா விமானதாக்குதலை மேற்கொண்டதாக தெரிவித்துள்ள அமெரிக்க இராணுவம் , இந்த தாக்குதல் விமானதாக்குதலுடன் தொடர்புபட்டவர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்டதா என்பதை தெரிவிக்கவில்லை.
நாங்கள் இலக்குவைக்கப்பட்ட நபரை கொலை செய்துள்ளோம் என்பது ஆரம்ப கட்ட தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளதாக கூறியுள்ள அமெரிக்க இராணுவம் பொதுமக்கள் எவரும் உயிரிழக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது.