பிரித்தானியாவில் தீவிரமாக பரவும் தொற்று! ஆபத்தில் மக்கள்
பிரித்தானியாவில் கொரோனா பரவலால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் பிரித்தானியாவில் ஒரேநாளில் புதிதாக 84,429 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,53,05,410 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 85 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரித்தானியாவில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 52 ஆயிரத்து 075 ஆக உயர்ந்துள்ளது. பிரித்தானியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 கோடியே 14 லட்சத்து 97 ஆயிரத்து 602 பேர் குணமடைந்துள்ளனர்.
தற்போது கொரோனா பாதிப்புடன் 36 இலட்சத்து 55 ஆயிரத்து 733 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் ஓமிக்ரோன் வைரஸ் பாதிப்பு மிகவும் கடுமையாக பரவி வருகிறது.
பிரித்தானியாவில் கண்டறியப்படும் கொரோனா பாதிப்பு அடைந்தோரில் 93.4% பேருக்கு Omicron பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தவிர 5.6% பேருக்கு டெல்டா வகை கொரோனா பாதிப்பு உள்ளது தெரியவந்துள்ளது.