பிரித்தானியாவில் புதிதாக ஒரே நாளில் 400க்கும் மேற்பட்டோர் பலி!
பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 94 ஆயிரத்து 432 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில் 438 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து பிரித்தானியாவில் 1 கோடியே 53 இலட்சத்து 99ஆயிரத்தை 300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1 இலட்சத்து 52 ஆயிரத்து 513 பேர் மரணமடைந்திருப்பதாக தெரிவந்துள்ளது.
பிரித்தானியாவில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 36 இலட்சத்து 29 ஆயிரத்து 756 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 713 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 இலட்சத்து 19 ஆயிரத்து 429 பேர் தொற்றிலிருந்து மீண்ட நிலையில், இதுவரையில் 1 கோடியே 16 இலட்சத்து 17 ஆயிரத்து 31 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர்.