கோவிஷீல்டு தடுப்பூசி பெற்றவர்களுக்கு மகிழ்ச்சியான தகவலை வெளியிட்ட இங்கிலாந்து!
இங்கிலாந்து அரசாங்கம் கோவிஷீல்டை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியாக அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக இங்கிலாந்தில் தற்போது 'சிவப்பு', 'அம்பர்' மற்றும் 'பச்சை' பட்டியலில் நாடுகளைக் குறிக்கும் ஒரு அமைப்பு உள்ளது.
அவை 'அம்பர் பட்டியலில்' இந்தியாவை வைத்துள்ளது. இதன் காரணமாக ,இங்கிலாந்திற்கு வருவதற்கு 10 நாட்களுக்கு முன்பு ஒரு நபர் 'அம்பர் பட்டியல்' நாட்டில் இருந்திருந்தால், அவர் இங்கிலாந்துக்குச் செல்வதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு கொரோனா வைரஸ் சோதனை எடுக்க வேண்டும்.
அதோடு ,ஒரு பயணி எதிர்மறை கொரோனா பரிசோதனை சான்று இல்லாமல் வந்தால்,அவருக்கு 500 பவுண்டு(இந்திய மதிப்பில் ரூ.50,401.70) அபராதம் மற்றும் இங்கிலாந்துக்கு வந்த பிறகு, பயணி 2 வது நாளில் கொரோனா சோதனை எடுக்க வேண்டும் என்பது கட்டாயம்.
குறிப்பாக,இந்தியர்கள் கோவிஷீல்டின் இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும், இங்கிலாந்துக்கு வருகை தந்த பிறகு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் நிபந்தனை இருந்தது.
இந்நிலையில், புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவால் கோவிஷீல்டுக்கு இங்கிலாந்து தகுதி பெற்றுள்ளதால் இப்போது இந்தியாவிலிருந்து செல்லும் பயணிகள் மகிழ்ச்சியடையலாம். சமீபத்திய முன்னேற்றங்களின்படி, இங்கிலாந்து அரசாங்கம் தனது பயண ஆலோசனையை திருத்தியுள்ளதுடன் கோவிஷீல்டை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியாக அறிவித்துள்ளது.
குறிப்பாக,புதுப்பிக்கப்பட்ட இங்கிலாந்து வழிகாட்டுதல்களின்படி, "அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட், அஸ்ட்ராஜெனேகா வக்ஸெவ்ரியா மற்றும் மாடர்ன் டகேடா போன்ற நான்கு பட்டியலிடப்பட்ட தடுப்பூசிகளின் உருவாக்கம் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளாக தகுதி பெறுகிறதாக கூறியுள்ளது.
அதன்படி,இங்கிலாந்திற்கு வருவதற்கு குறைந்தது 14 நாட்களுக்கு முன்பே அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியின் முழுமையான அளவை பெற்றிருக்க வேண்டும் எனினும், தடுப்பூசி சான்றிதழ் தொடர்பாக இன்னும் சிக்கல்கள் உள்ளதாகவும் இங்கிலாந்து அரசாங்கம் மேலும் தெளிவுபடுத்தியுள்ளது.