பிரிட்டன் எம்.பி. கொலையில் பயங்கரவாதிகளுக்கு தொடர்பா?
பிரிட்டன் எம்பி கொலை சம்பவத்தில் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பிரிட்டன் ஆளும் கட்சி எம்பி டேவிட் அமெஸ்(69) தன சவுத் எண்ட் வெஸ்ட் தொகுதியில் மக்களை நேரில் சந்தித்து பேசினார். அந்த சமயத்தில் அங்கிருந்த 25 வயது இளைஞன் ஒருவன் அவரை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்.
இதில் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து குறித்த இளைஞரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த கொலையில் மதம் சார்ந்த பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருக்க வாய்ப்புள்ளதாக ஸ்காட்லாந்து யார்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.