மன்னிப்பு கோரிய பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன்!
ஊரடங்கு உத்தரவின் போது கொரோனா கட்டுப்பாடுகளை மீறி மது விருந்தில் கலந்து கொண்டதற்காக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.
மே 2020 இல் லண்டனில் உள்ள டவுனிங் தெருவில் உள்ள தனது அலுவலகத் தோட்டத்தில் நடந்த மது விருந்தில் போரிஸ் ஜான்சன், நாட்டில் முழு ஊரடங்கு உத்தரவுடன் கலந்து கொண்டார்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் பிரதமர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்நிலையில், விதிகளை சரியாக பின்பற்றாததால், தன் மீதான மக்களின் கோபத்தை புரிந்து கொண்டதாக, நேற்று நடந்த பார்லிமென்ட் கூட்டத்தொடரில், போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கேட்டார்.