ஆன்லைனில் நடந்த டிரெண்டிங் திருமணம்: இது புதுசா இருக்கே!!!
இந்தியாவின் கேரளாவை சேர்ந்த பெண் ஒருவருக்கும், உக்ரைனில் வசிக்கும் நபர் ஒருவருக்கு ஆன்லைன் திருமணம் நடந்த சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது.
இந்திய நாட்டின் கேரளாவின் கொல்லம் மாவட்டம் புனலூரை சேர்ந்தவர் ஜீவன்குமார், உக்ரைனில் பணியாற்றி வருகிறார்.
இவருக்கும், திருவனந்தபுரம் கழக்கூட்டத்தை சேர்ந்த தன்யாவுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
கடந்த மார்ச் மாதமே திருமணத்துக்காக விண்ணப்பித்திருந்த நிலையில், கொரோனா காரணமாக ஜீவன்குமாரால் சொந்த ஊருக்கு வர இயலவில்லை.
இதையடுத்து ஆன்லைன் மூலம் திருமணத்தை நடத்த அனுமதிக்கக்கோரி இருவரும் கேரள ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வெளியுறவுத்துறை மற்றும் தொழில்நுட்ப துறையிடம் கருத்து கேட்கப்பட்டது.
இது துறைகளும் அனுமதி வழங்கிய நிலையில், நேற்று சார் பதிவாளர் அலுவலகத்தில் வைத்து திருமணம் நடந்தது.
இரு வீட்டார் மட்டும் கலந்து கொண்டனர், மணமகனுக்கு பதிலாக அவரின் தந்தை திருமண பதிவேட்டில் கையெழுத்திட்டார்.
தொடர்ந்த மணமகள் தன்யாவுக்கு திருமண சான்றிதழ் வழங்கப்பட்டது.