ரஷ்ய படைகளின் மற்றுமொரு முக்கிய தலைவரை வீழ்த்திய உக்ரைன்!
கிழக்கு உக்ரைனில் ரஷிய இராணுவ ஜெனரல் ரோமன் குடுசோவ் கொல்லப்பட்டதாக ரஷ்ய அரசு ஊடக பத்திரிக்கையாளர் அலெக்சாண்டர் ஸ்லாட்கோவ் தெரிவித்ததாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன.
அதேசமயம் ரஷ்ய இராணுவத்தால் இந்த இறப்பு உறுதிப்படுத்தப்பட்டால், உக்ரைனில் மூன்று மாதங்களுக்கும் மேலாக நடந்த சண்டையில் கொல்லப்பட்ட நான்காவது ரஷ்ய ஜெனரலாக குதுசோவ் இருப்பார். எனினும் ஜெனரல் ரோமன் எப்போது, எங்கு கொல்லப்பட்டார் என்பது குறித்து முழு விபரத்தை அவர் வெளியிடவில்லை.
அதேசமயம் குடுசோவ் ஞாயிற்றுக்கிழமை ஒரு டொனெட்ஸ்க் பிராந்திய குடியேற்றத்தைத் தாக்குமாறு தனது படைகளுக்கு உத்தரவிட்டதாக கூறப்படும் நிலஒஇயில், தாக்குதலை வழிநடத்த வேண்டிய கட்டாயம் அவருக்கே ஏற்பட்டதாகவும், அதில் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை உக்ரேனில் குறைந்தபட்சம் 317 ரஷ்ய அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மேஜர்கள், லெப்டினன்ட் கர்னல்கள் மற்றும் மமான்டர்கள் என கிடைக்கும் தரவுகளை மேற்கோள் காட்டி சுதந்திர ரஷ்ய ஊடகங்கள் கடந்த ஏப்ரலில் செய்தி வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.