அதிபர் புடினுக்கு சவால் விட்ட உக்ரைன் முதல் பெண்மணி!
ரஷ்யாவிடம் எங்கள் நாட்டின் சில பகுதிகளை ஒப்படைத்தாலும் போரை முடிவுக்கு கொண்டு வர முடியாது என உக்ரைன் முதல் பெண்மணி ஒலேனா ஜெலென்ஸ்கா(Olena Zhelenska) கூறினார்.
ரஷ்யாவிற்கு நாட்டின் சில பகுதிகளை விட்டுக்கொடுப்பது "சுதந்திரம்" மற்றும் அதிபர் விளாடிமிர் புடினின்(Vladimir Putin)படையெடுப்பை முடிவுக்கு கொண்டு வராது என்று உக்ரேனிய முதல் பெண்மணி ஒலேனா ஜெலென்ஸ்கா(Olena Zhelenska) கூறினார்.
இதன்படி ஒலேனா ஜெலென்ஸ்கா(Olena Zhelenska) கூறியதாவது:- நாங்கள் சில சமயங்களில் நாடுகளின் தலைவர்களிடமிருந்து சில சந்தர்ப்பங்களில் பெரிய மற்றும் செல்வாக்கு மிக்க நாடுகளின் தலைவர்களிடமிருந்து கேட்கும் அனைத்து அறிக்கைகளையும் உக்ரேனியர்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
உங்கள் நாட்டின் சில பகுதிகளை மட்டும் விட்டு கொடுக்க முடியாது, இது ஒரு சுதந்திரத்தை விட்டு கொடுப்பது போன்றது. டான்பாஸ் பகுதியில் ரஷ்யா இப்போது அதன் தாக்குதலை தொடங்கி உள்ளது.
எங்கள் நாட்டடின் பகுதிகளை நாங்கள் கொடுத்தாலும் ஆக்கிரமிப்பாளர் போரை நிறுத்த மாட்டார்கள்.
அவர்கள் தொடர்ந்து அழுத்துவார்கள் அவர்கள் தொடர்ந்து எங்கள் நாட்டிற்கு எதிராக மேலும் மேலும் தாக்குதல்களை நடத்துவார் என உக்ரைன் முதல் பெண்மணி ஒலேனா ஜெலென்ஸ்கா(Olena Zhelenska) கூறினார்.