இந்த ஆண்டு முடிவுக்கு வந்துவிடும்... உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் நம்பிக்கை
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் இந்த ஆண்டுக்குள் முடிவுக்கு வந்துவிடும் என தாம் நம்புவதாக பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு 100 நாட்களை கடந்துள்ள் நிலையில், உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் Oleksiy Reznikov இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.
சர்வதேச பாதுகாப்பு மன்றத்தில் உக்ரைன் மீதான படையெடுப்பு குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் Oleksiy Reznikov இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.
உக்ரைனை மொத்தமாக கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. தற்போதைய சூழலில் போர் எப்போது முடிவுக்கு வரும் என தம்மால் கணிக்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ள அவர், ஆனால் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவுக்கு வந்துவிடும் என தாம் நம்புவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், உக்ரைன் நிலப்பரப்பை ரஷ்யா ஆக்கிரமித்து கைப்பற்றியிருப்பது, எஞ்சிய நாடுகளுக்கான எச்சரிக்கை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உக்ரைனை அடுத்து போலந்து, பால்டிக் நாடுகள், ஸ்லோவாக்கியா என ரஷ்யா குறிவைக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாகவே, ரஷ்யாவை இப்போதே தடுத்து நிறுத்த வேண்டும் என தாங்கள் கோரி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, உக்ரைன் தொடர்பில் ரஷ்யாவை எவரும் அவமானப்படுத்த வேண்டாம் என பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் கூறியுள்ள கருத்துக்கு உக்ரைன் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா தொடர்பான பிரான்ஸ் ஜனாதிபதியின் கருத்து உண்மையில் பிரான்ஸ் நாட்டுக்கு தான் தலைகுனிவு என்றார்.