யுக்ரைன் போர்க்குற்றங்கள்; ரஷ்யாவுக்கு எதிராக புதிய நடவடிக்கை
யுக்ரைனில் இடம்பெற்று வரும் போர்க்குற்றங்கள் குறித்து ஆராய சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு 2.5 மில்லியன் யூரோக்கள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனி, நெதர்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் இணைந்து குறித்த தொகையினை வழங்க முன்வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதேசமயம் யுக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தொடர்ந்தும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.
ரஷ்யா, யுக்ரைனில் பொதுமக்கள் உள்ள பகுதிகளில் தாக்குதல்களை நடத்துவதால் அங்கு அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளதுடன், பல பெறுமதி மிக்க கட்டிடங்களும் சேதமாக்கப்பட்டுள்ளன.
அதேநேரம், ரஷ்ய இராணுவம் சில இடங்களில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டு வருவதாக யுக்ரைன் குற்றம் சுமத்தியுள்ளது.
இவ்வாறான சூழலில், நீதிமன்றத்தின் ஊடாகவே, குற்றவாளிகளுக்கான தண்டனையை உரிய முறையில் வழங்க முடியும் என்ற நிலைப்பாட்டில் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளதாகவும் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.