உக்ரைன் போர் தொடர்பில் பிரித்தானிய பாதுகாப்பு அதிகாரிகள் கணிப்பு!
ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) மனித உயிர்கள் பலியாவதை பொருட்படுத்தாமல், ஒருவிதத்தில் வெற்றியை பெறுவதில் உறுதியாக இருக்கிறார்.
உக்ரைனில் அடுத்த கட்டமாக, பல மாதங்கள் நீடிக்கும் போராக உருவாகும் வாய்ப்புள்ளது என பிரித்தானிய பாதுகாப்பு அதிகாரிகள் கணித்துள்ளனர்.
பிரித்தானியாவின் மூத்த தேசிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் இன்று அந்நாட்டின் அமைச்சரவையில் விளக்கம் அளித்தார்.’
அப்போது அவர் கூறுகையில்,
“கடுமையான உக்ரேனிய எதிர்ப்பிற்கு எதிராக ரஷ்யாவின் அதிக எண்ணிக்கையிலான படைகள் சொந்தமாக தீர்க்கமான முடிவுகளை எடுக்க வாய்ப்பில்லை.
வடக்கு உக்ரைனில் ஏற்பட்ட முந்தைய பின்னடைவுகளில் இருந்து ரஷ்யா இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பது தெரிகிறது. ரஷ்ய துருப்புக்கள் பிரிந்து சண்டையிடுகின்றனர்.
சில வீரர்கள் மற்றும் பிரிவுகள் சண்டையிட மறுக்கின்றன. உக்ரைனில் அடுத்த கட்டமாக, பல மாதங்கள் நீடிக்கும் போராக உருவாகும் வாய்ப்புள்ளது” என்றார்.
இந்த நிலையில், பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) சமீபத்தில் தான் உக்ரைனுக்கு சென்று வந்தார். இன்று அவருடைய செய்தித்தொடர்பாளர் அமைச்சரவையில் பிரதமர் பேசியதை கூறினார்.
அதில் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியதாவது
“உக்ரைனின் நிலை ஆபத்தானது. ஏனெனில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ரஷ்ய துருப்புக்களின் தோல்விகளால் கோபத்தில் உள்ளார்.
ஆனால் அவர் மனித உயிர்கள் பலியாவதை பொருட்படுத்தாமல், ஒருவிதத்தில் வெற்றியை பெறுவதில் உறுதியாக இருக்கிறார்” என்று தெரிவித்தார்.
இதன் மூலம், விரைவில் முடிவுக்கு வரும் என்று நினைத்து கொண்டிருந்த உக்ரைன் போர், ரஷ்யா வெற்றி பெறும் வரை தொடரும் என்ற நிலை உள்ளது என்பது பிரித்தானிய அதிகாரிகளின் கருத்தின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.