ரஷ்ய துருப்புக்களால் கொடூரமாக கொல்லப்பட்ட உக்ரைன் மேயர்; இறுதியாக மக்களுக்கு கூறிய செய்தி!
உக்ரைனில் Olga Sukhenko பெண் மேயரை, கடத்திக் குடும்பத்துடன் கொடூரமாக கொலை செய்த நிலையில் கடைசியாக அவர் கிராம மக்களுக்கு தெரிவித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.
மேயர் Olga Sukhenko வை ரஷ்ய படைகள் கடத்திச்சென்று கொலை செய்தனர். அதன்பிறகு, அவரின் உடலை, அவரது கணவர் மற்றும் மகன் சடலங்களுடன் ஒரு பள்ளத்தில் கண்டறிந்துள்ளார்கள்.
Olga Sukhenko-ஐ அவரின் வீட்டிலிருந்து குடும்பத்தினருடன் கடத்தி சென்று கொலை செய்து வனப்பகுதியில் இருக்கும் ஒரு பள்ளத்தில் சடலத்தை வீசி சென்றிருக்கிறார்கள்.
இந்நிலையில், அவர்கள் கடத்துவதற்கு முன்பாக தன் கிராமத்தில் உள்ள மக்களுக்கு முகநூல் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டிருக்கிறார். அதில்,
அன்பான குடியிருப்பு வாசிகளே, நம் பகுதியை குப்பைகள் ஆக்கிரமித்திருப்பதை உணருகிறேன். எனவே கவனமுடன் இருங்கள், உங்கள் வீட்டிலிருந்து வெளியே வராதீர்கள். அமைதியை கடைபிடிப்போம் என Olga Sukhenko பதிவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.