முழுமையாக சேதம் அடைந்த செனோபில் அனு மின் கட்டமைப்புகள்! உக்ரைன் குற்றச்சாட்டு
உக்ரைனில் உள்ள செர்னோபில் அணு மின் நிலையத்திற்கு மின்வசதி வழங்கும் மின் கட்டமைப்புகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 14-வது நாளாக தாக்குதலை தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷ்யா உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றும் திட்டத்துடன் தாக்குதலை நடத்தி வருகிறது.
உக்ரைனில் இருக்கும் மிகப்பெரிய அணு உலையான செர்னோபில்லை ரஷ்யா கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
இந்த நிலையில், செர்னோபில் அணு மின் நிலையத்திற்கு மின்வசதி வழங்கும் மின் கட்டமைப்புகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
மின் கட்டமைப்புகளை மீண்டும் சரி செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை எனத் தெரிவித்துள்ள உக்ரைன், அணு எரிபொருள் சேமிப்பு வசதியின் குளிரூட்டும் அமைப்புகள் மின் வசதியின்றி இருந்தால் கதிர்வீச்சு அதிகரிக்கும்.
ரஷ்யாவின் நடவடிக்கைகள் ஐரோப்பாவை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது. மின் விநியோகத்தை மீட்டெடுக்க அனுமதிக்குமாறு உலக நாடுகள் ரஷ்யாவிடம் வலியுறுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.