உள்ளாடைகளைக் காட்சிப்படுத்தி அரசாங்கதிற்கு நூதன எதிர்ப்பு
இலங்கையில் உள்ளாடைகளை காட்சிப்படுத்தி அரசாங்கத்திற்கு எதிராக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு வழிகளில் போராட்ட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் இன்றைய தினம் உள்ளாடைகளைக் காட்சிப்படுத்தி ஓர் நூதமான எதிர்ப்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும், அரசாங்கத்திற்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
பொலிஸாரில் அமைக்கப்பட்டுள்ள விதித் தடைகளிலும் ஏனைய பல்வேறு இடங்களிலும் ஆண்கள் மற்றும் பெண்களின் உள்ளாடைகள் பெருமளவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றிற்கு அருகாமையில் திருடர் போ கிராமம் என்ற போராட்டக்களம் உருவாக்கப்பட்டுள்ளதுடன், அங்கு எதிர்ப்பை வெளியிடுவதற்கு உள்ளாடை ஒன்றை கொண்டு வாருங்கள் என நேற்றைய தினம் சமூக ஊடகங்களில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பல்வேறு போராட்டக்களங்களில் இன்று உள்ளாடைகளை காட்சிப்படுத்தி அரசாங்கத்திற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.



