தீடிரென அதிகரிக்கும் தொற்று: அச்சத்தில் பிரித்தானிய மக்கள்
பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1 இலட்சத்து 2 ஆயிரத்து 292 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில் 346 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரித்தானியாவில் இதுவரையில் 1 கோடியே 61 இலட்சத்து 49 ஆயிரத்து 319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1 இலட்சத்து 54 ஆயிரத்து 702 பேர் மரணமடைந்திருப்பதாக தெரிவந்துள்ளது.
பிரித்தானியாவில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 32 இலட்சத்து 13 ஆயிரத்து 305 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், Covid-19 தொற்றால் 575 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 இலட்சத்து 88 ஆயிரத்து 68 பேர் தொற்றிலிருந்து மீண்ட நிலையில், இதுவரையில் 1 கோடியே 27 இலட்சத்து 81 ஆயிரத்து 312 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர்.