பிரித்தானியாவில் சடுதியாக அதிகரிக்கும் மரணங்களின் எண்ணிக்கை!
பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1 இலட்சத்து 94 ஆயிரத்து 747 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில் 343 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து பிரித்தானியாவில் 1 கோடியே 38 இலட்சத்து 35 ஆயிரத்தை 334 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1இலட்சத்து 49 ஆயிரத்து 284 பேர் மரணமடைந்திருப்பதாக தெரிவந்துள்ளது.
பிரித்தானியாவில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 21 இலட்சத்து 89 ஆயிரத்து 308 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், Covid-19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு 911 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 57 ஆயிரத்து 51 பேர் தொற்றிலிருந்து மீண்ட நிலையில், இதுவரையில் 1 கோடியே 56 இலட்சத்து 7 ஆயிரத்து 672 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர்.