பல்கலைக்கழக வளகத்தில் பேராசிரியரை நோக்கி துப்பாக்கிச்சூடு! நேர்ந்த சோகம்
அமெரிக்காவில் சேப்பல் ஹில்லில் உள்ள வடக்கு கரோலினா பல்கலைக்கழக வளகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பல்கலைக்கழக பேராசிரியர் கொல்லப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த பல்கலைக்கழகத்தில் உள்ள அறிவியல் கட்டிடத்தில் நுழைந்த மர்ம நபர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்த பேராசிரியரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் பேராசிரியர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தகவலறிநது பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
உயிரிழந்த பேராசிரியரின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் சி.சி.ரி.வி. கமரா காட்சிகளை ஆய்வு செய்த பொலிஸார் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணம் தொடர்பில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேவேளை, சந்தேகநபர் மற்றும் ஆசிரியரின் பெயர்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை. துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.